states

பி.எம்.மித்ரா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்துக!

சென்னை, மார்ச் 18- தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி  மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா)  திட்டத்தை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த  வேண்டும் எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா பூங்காவை அமைக்க விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிரா மத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இப்பூங்காவின் மூலம் தமிழ்நாட் டின் தென் மாவட்டங்கள் பெரிதும் பயனடையும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்குத் தேவை யான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமையாகச் செயல்படும், தமிழ் நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) இப் பூங்கா அமைய உள்ள இடத்தில் ஏற்கனவே 1,052 ஏக்கர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளதாகவும், அத னால் அந்நிறுவனம் இந்தத் திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்தத் தயாராக உள்ளது என்றும் தனது  கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில்  பூங்காக்களை நிறுவி, தனது திறனை நிரூபித்துள்ளது என்றும், தற்போது மாநிலத்தில், 2,890 நிறுவனங் கள் 3,94,785 பணியாளர்களுடன், 38,522 ஏக்கரில்  28 தொழிற்பேட்டைகளை அந்நிறுவனம் நிறுவியுள்ள தையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழ் நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறு வனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழில் பூங்காக்களில் தொழில் தொடங்க விரும்பு வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றி யைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பி.எம். மித்ரா பூங்காவை சிப்காட் நிறுவனத்தின் மூலம்  செயல்படுத்தினால், இந்தத் திட்டத்தின் நோக்கங் களை வெற்றிகரமாக அடைந்திட இயலும் என்று தமிழ்  நாடு அரசு உறுதியாக நம்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவ தற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்  துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கனவே பல்வேறு  தொழிற்பூங்காக்களை மேம்படுத்தி, செயல்படுத்து வதில் உறுதியான சாதனை நிகழ்த்தியுள்ளதால், தமிழ்  நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் மூலம், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.