தூத்துக்குடி, அக்.22- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, வருவாய் வட்டாட்சியர்கள் 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: நீதிபதி அருணா ஜெக தீசன் அறிக்கையின்படி, தூத் துக்குடி துப்பாக்கிச் சூடு சம் பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர். வரு வாய் - பேரிடா் மேலாண் மைத் துறையைச் சேர்ந்த 3 வருவாய்த்துறை அதிகாரி கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக் கும் பணிகள் தொடங்கியுள் ளன என முதல்வர் மு.க.ஸ்டா லின் பேரவையில் அக்டோ பர் 19-ஆம் தேதி தெரிவித்தி ருந்தார். அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு டைய வருவாய் வட்டாட்சி யர்கள் சேகர், சந்திரன், கண் ணன் ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நட வடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்றார்.