states

மழலையர் வகுப்பு சேர்க்கை தொடங்குவதில் குழப்பம்

சென்னை, ஜூன் 26- பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டு தல் வழங்காததால், அரசுப் பள்ளிகளில் மழ லையர் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கு வதில் குழப்பம் நிலவுகிறது. பள்ளிக்கு வரும் பெற்றோர் திருப்பி அனுப்பப்படுவதாக புகார்  எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில்  இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் கடந்த  2019-ல் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட் டன. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட  மாற்றம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளி களில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தை களை சேர்த்தனர். இதற்கிடையே, ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, அரசுப் பள்ளிகளில் இயங்கிய மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு  எழுந்ததால், ‘மழலையர் வகுப்புகள் அரசுப்  பள்ளிகளிலேயே தொடர்ந்து இயங்கும். இதற்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் நிய மிக்கப்படுவார்கள்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்  கள் ஆகியும், மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை கோரி  வருபவர்களை திருப்பி அனுப்புவது பெற் றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளிகள் ஒருமாதம் முன்பே சேர்க்கையை முடித்துவிட்டன. அரசுப் பள்ளி யில் நிலவும் தாமதத்தால் பெற்றோர் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை உரு வாகி உள்ளதாக கல்வியாளர்களும் குற்றம்  சாட்டியுள்ளனர்.