states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, மொத்த குறைப்பிரசவங்களில் 20 சத விகிதம் (3.02 மில்லியன்) இந்தியாவில் நடக்கிறது.  அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், நைஜீரியா, சீனா, எத்தியோப்பியா, வங்கதேசம், காங்கோ ஜன நாயகக் குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடு களும் அதிகமான அளவில் குறைப்பிரசவ மதிப்பீடு கள் உள்ளன என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்  டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்கள்  தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்ள +91-87602  48625, +91-99402 56444,  +91-96000 23645  ஆகிய 3 தொலைபேசி எண்களை அழைக்க லாம். மேலும் nrtchennai@tn.gov.in,  nrtchennai@gmail.com என்ற இணைய தளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ள லாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலை யில், இஸ்ரேலில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் வாரியத்தை தொடர்பு  கொண்டனர். 15 தமிழர்களும் தற்போது பாது காப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரோப்கார் சேவை, ஞாயிறு முதல் மீண்டும் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறி வித்துள்ளது.

இஸ்ரேல் போர் எதிரொலி காரணமாக தங்கத்  தின் விலையில் சனியன்று அதிரடி மாற்றம்  ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு 160 உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் ரூ.520 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35,370க்கும், சவரன் ரூ. 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்த நிலையில், மாலை ஒரு கிராம்  ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ. 75-க்கு விற்பனை யாகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: சென்னை யில் நடைபெறும் போட்டிகளை முன்னிட்டு,  அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதி ரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்  இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக 190 கிமீ  தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமி டப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.