states

இரயில் பாதையை பராமரிக்க உதவும் ராட்சத ரோபோட்

ஜப்பான் ரயில்வே இரயில் பாதைகளை  பராமரிக்க ராட்சத ரோபோட்டுகளை நியமித்துள்ளது. பார்ப்பதற்கு 1980களில் வந்த அறிவியல் புனைகதைகளில் இடம்பெற்ற அச்சமூட்டும் ரோபோட்டு கள் போலத்  தோன்றினாலும் உண்மை யில் இந்த ராட்சத ரோபோட் வண்ணப்பூச்சு  பூசுவதற்கும் தோட்டவேலை செய்வதற் கும் உள்ள ரோபோட்டுகளையே நமக்கு நினைவூட்டுகிறது. ஜூலை 2024 முதல் இது மேற்கு ஜப்பான் இரயில்வேயில் செயல்படத் தொடங்கியுள்ளது. டிஸ்னி உலகின் வால் இ என்ற சிறிய  ரோபோட்டின் (Wall-E-like) தலைமற்றும்  கரி அடைக்கப்பட்ட பாட்டிலின் வாய்  போல உள்ள கண்களையும் பெற்றுள்ள  இது ஒரு டிரக்கின் மீது பொருத்தப்பட்டு ளது. இரயில் பாதைகளில் ஓடும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்லது. இதை இயக்குபவர் ஓட்டுநருக்கான பகுதியில் அமர்ந்து கேமரா கண்கள் மூலம் ரோபோட்டின் கண்களை கண்கா ணித்து அதன் சக்தி வாய்ந்த கைகள் உள்ளிட்ட பகுதிகளை தானியங்கி முறை யில் இயக்குகிறார். இதன் கைகளின் நீளம்12 மீட்டர். இதனுடன் பொருத்தப் பட்டுள்ள பல்வேறு பகுதிகளை இந்த ரோபோட் இயக்கும். 40 கிலோகிராம் வரை  எடையுள்ள பொருட்களை இதனால் தூக்கமுடியும். கையால் தூரிகையை பிடித்து வேலை செய்யவும் சங்கிலிகளை இயக்கவும் முடியும். இரயில் பாதை கம்பிகளை பொருத்த முடியும். மரக்கிளைகளை வெட்டி பாதை யை சீர்படுத்தும். இரயிலுக்கு மேல் இருக்கும் கேபிள்களில் உள்ள பிரேம் களை வண்ணம் பூசும். இவையே இதன் ஆரம்பகால வேலை. முதுமையடையும் ஜப்பானிய சமூகத்தில் ஏற்படும் தொழிலா ளர் பற்றாக்குறையை போக்க இந்த தொழில்நுட்பம் உதவும். தொழிலாளர்கள் உயரமான  இடங்களில் இருந்து தவறி  விழுவது, மின்சார அதிர்ச்சிக்கு ஆளாவ தால் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இந்த ரோபோட் பயன்படும். “வருங்காலத்தில் மேற்கு ஜப்பான் இரயில்வேயில் உள்ள அனைத்து வகை பராமரிப்பு பணிகளும், உட்கட்டமைப்பு வேலைகளும் இயந்திரங்களை கொண்டே  மேற்கொள்ளப்படவுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையை போக்க இத்தொழில்நுட்பம் எந்த அள விற்கு உதவும் என்பதை இதன் மூலம் அறியமுடியும்” என்று மேற்கு ஜப்பான் இரயில்வே தலைவர் கசுவாக்கி ஹேஸ்காவா (Kazuaki Hasegawa) கூறு கிறார். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து உயரப் பறக்கும் பீனிக்ஸ் பறவை போல  உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் ஜப்பானின் இத்தொழில்நுட்பம் உலகிற்கே ஒரு தலை சிறந்த முன் மாதிரி திட்டம் என்பதில் ஐயமில்லை.