- கொரோனா பரவல் (ஒமைக்ரான் பிஎப் 7) குறித்து பொதுவான எச்ச ரிக்கை மட்டுமே விடுக்க ப்பட்டுள்ளது. மாநில த்தில் 100% தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ப தால் அச்சம் கொள்ள தேவை இல்லை; என்றா லும் பொதுமக்கள் எச்சரி க்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
- சீன உடனான மோதல் குறித்து விவாதம் நடத்த முன்வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வியாழனன்றும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பகல் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
- உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி யின் அமெரிக்க பயணத் தால் எவ்வித பலனும் கிடைக்கப் போவ தில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
- கடந்த நவம்பர் மாதம் மட்டும் பேஸ்புக், இன்ஸ் டாகிராமில் 2.30 கோடி பதிவுகள் அகற்றப்பட்டுள் ளது என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தகவல் தெரிவித்துள்ளது.
- காங்கிரஸ் யாத்திரை தில்லியில் நுழையப் போகிறது. இதனால் ஒமைக்ரான் பாதிப்பு அதி கரித்து வருவதாகக் கூறு கிறார்கள். ஒமைக்ரான் பரவல் எழுச்சி ஆகஸ்ட் - நவம்பர் கால கட்டங்களி லேயே தகவல் கிடைத் தும், பிரதமர் மோடி ஏன் குஜராத் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய் தார் என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
- மகாராஷ்டிர சபாநாய கர் ராகுல் நர்வேகருக்கு எதிராக ஆட்சேபனைக் குரிய வகையில் பேசிய தாக என்சிபி எம்எல்ஏ ஜெயந்த் பாட்டீல் சட்ட சபை கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
- ஒமைக்ரான் பிஎப் 7 எச்சரிக்கையால் தாஜ் மஹால் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோ னா சோதனை இல்லாமல் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை பரிதாப மாக உயிரிழந்தது.
- வேளாண் பணிகளுக் காக விவசாயிகளுக்கு ரூ.20,000 இலவசமாக வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது
- திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தில் பிறந்து 52 நாட்களான ஆண் குழந்தை தடுப்பூசி செலுத்திய மறுநாளில் உயிரிழந்தது. 45 நாளில் போட வேண்டிய தடுப் பூசியை 52 நாளில் போட்டதால் மூக்கு, வாய் வழியாக ரத்தம் கசிந்து குழந்தை உயிரிழப்பு எனத் தகவல்.
- தங்கள் இருநாட்டு நட்புறவை ஆழப்படுத்தும் வகையில் கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக சீனாவும், ரஷ்யாவும் அறிவித்துள்ளன. கிழக்கு சீனக்கடலில் தற்போது துவங்கும் இருநாட்டுக் கூட்டுப் பயிற்சிகள் இரு நாட்டு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று சீனா கூறியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து தெற்குப் பகுதியில் உள்ள ஜெசியாங் மாகாணத்தின் கடற்பகுதியில் நடக்கும் இந்தப் பயிற்சி டிசம்பர் 27 ஆம் தேதி வரையில் நடைபெறும்.
- நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் மிகவும் வேகமாகப் பரவி வரும் காலரா குறித்து விசாரணை நடத்துமாறு அந்நாட்டு நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. குறிப்பாக, ஒட்டுமொத்தமாக பத்து கிராமங்கள் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம் என்று தொடக்க கட்ட விசாரணைகள் தெரிவித்ததால், நாட்டு மக்கள் மத்தியில் காலரா குறித்த செய்திகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நைஜீரியா இறங்கியிருக்கிறது.
- தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யப்பட்ட தைக் கண்டித்து நடைபெறும் போராட்டம் தொடர்கிறது. அடக்குமுறைக்கு மேலும் ஒருவர் பலியாகி, இதுவரையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலை 2024ல் நடத்துவது என்ற அரசின் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.