states

ஏப்.18 முதல் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது

தற்பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். 

புதுதில்லி, மார்ச் 14- தற்பாலின திருமணங்களுக்கு அனுமதி கோரும் வழக்குகள் 5 நீதிபதிகள் அடங்கிய,  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர் வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு இந்த வழக்கு  ஏப்ரல் 18 முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்  ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வயதுவந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த வர்கள் (ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ) பாலுறவு கொள்வதை, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு- 377 குற்றம் எனக்  கூறியது. அதற்கு தண்டனையையும் வரை யறுத்து வைத்திருந்தது.  அதாவது, “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்கு டன் பாலுறவு கொள்பவர்கள், ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை யிலான சிறைத் தண்டனை ஆகிய தண்ட னைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம்  செலுத்தவும் பொறுப்பானவர்

ஆவார்கள்” என்று இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 குறிப்பிட்டது. பிரிட்டிஷ் காலத்திய இந்த சட்டத்தை எதிர்த்து, கடந்த 2016-இல் பல்வேறு அமைப்பு கள் மற்றும் தனிநபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த  அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, “தற்பாலின உறவு  என்பது குற்றமல்ல” என 2018 செப்டம்பர் 6-ஆம்  தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. மேலும் இந்திய தண் டனை சட்டத்தின் பிரிவு 377-ஐயும் நீக்கி உத்தர விட்டது. இதையடுத்து, தற்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின்  கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தற்பாலின தம்பதிகள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். “திருமணத்துக்கான இணையரை தேர்வு  செய்யும் உரிமை எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian,  Gay, Bisexual, Transgender, Queer or Questioning persons or the community - LGBTQ) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்; தற்பாலின திருமணத்தை அங்கீ கரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அரசியல மைப்புச் சட்டப்பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே தற்பாலின உறவாளர்களின் திரு மணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஹீமா கோலி அடங்கிய அமர்வு, மனு குறித்து ஒன்றிய அரசு  பதிலளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து பதில்மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு, “சமூகத்தில் பல்வேறு வகை யான உறவுகள் இருக்கின்றன. இந்த தம்பதி யினருக்கு அந்தந்த மாநில அரசுகள் அங்கீகா ரம் வழங்காமல் இருக்கலாம். ஆனால், ஒரே பாலினத்தவர் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும், உட லுறவு கொள்வதும் சட்டப்படி குற்றமல்ல. அதே நேரம் இவர்களை கணவன், மனைவி, குழந்தை கள் என்று இருக்கும் குடும்பத்துடன் ஒப்பிட முடியாது. நாட்டின் விதிமுறைகள், சமூக ஒழுக்  கத்தின் அடிப்படையில் தற்பாலின திருமணங் களை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி வாழும் போது, சட்டத்தின் பல்வேறு நிலை களில், அவர்களில் யாரை கணவன் அல்லது  மனைவி என்று பிரித்து கூறுவது கடினமானது.  மேலும், அதிகாரப்பூர்வமாக இயற்றப்பட்ட சட்டங்களினால் எந்த பலனும் இல்லாமல் போய்விடும். இந்து திருமணச் சட்டம், கிறிஸ்  தவ திருமண சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டம் ஆகியவை உயிரியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்கின்றன. திருமணம் என்பது ஆண், பெண்ணுக்கு இடையேதான் நடக்க வேண்டும் என்று சட்டங்களில் கூறப்  பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஒரே பாலின  திருமணத்தை பதிவு செய்வது சட்டவிதிகளை  மீறுவதாகும். கணவன், மனைவி, குழந்தை  அடங்கிய இந்திய குடும்ப அமைப்பை பொறுத்தவரையில், கணவன் என்ற ஆண்,  மனைவி என்ற பெண், இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும். திருமண  உறவுக்குள் நுழையும் நபர்கள் சொந்த பொது  முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு அமைப்பை உரு வாக்குகின்றனர். ஏனெனில், இது ஒரு சமூக நிறுவனமாகும். அது, பல உரிமைகள், பொறுப்புகளை கொண்டுள்ளது.

இவ்வாறு நடைமுறையில் இருக்கும் குடும்ப அமைப்பு களை மீறி, தற்பாலின திருமணங்களுக்கு சட்ட  அனுமதி வழங்குவது, ஏற்கனவே உள்ள தனிப்  பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட உறவின் வரம்பு போன்ற சட்ட விதிகளை மீறுவதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணம் நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை மனுதாரர்கள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு  14, 21-இன் கீழ் அடிப்படை உரிமையாக கோர  முடியாது. எனவே, ஒரே பாலின திரு மணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்  கூடாது” என்று குறிப்பிட்டது. இதையடுத்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி  உத்தரவிட்ட தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு, “இந்தியாவில் தற்பாலினத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பான இறுதிக் கட்ட வாதங்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி துவங்  கும்” என்று அறிவித்தது. மேலும், இந்த வழக்கு  ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும். ஏனெனில் இந்த விஷயத்தில் எடுக்கும் முடிவு  எதுவாக இருந்தாலும் அது சமூகத்தில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப் படும் என்றும் தெரிவித்துள்ளது.