states

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களை கைது செய்ய உத்தரவு

நாசிக், ஜன. 24 - கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட இடாக்புரி தாலுகாவில் பழங்குடி யின சிறுமி மர்மமான முறையில் உயிரிழந் தார். அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற் பட்ட சிறுமிகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிய வர தேசிய பழங்குடியினர் நல ஆணையம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்ய வில்லை என்பதை ஆணையம் கண்டறிந்த நிலையில், டி.கங்காதரன் (மாவட்ட ஆட்சியர், நாசிக்), ராஜேந்திர பி.போசலே (மாவட்ட ஆட்சியர், அகமதுநகர்), ராகேஷ் ஓலா (எஸ்பி, அகமதுநகர்), ஷாஹாஜி உமாப் (எஸ்பி, நாசிக் புறநகர்) ஆகிய 4 பேரையும் ஜனவரி மாத தொடக்கத்தில் ஆஜராக தேசிய பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  ஆனால் 15 நாட்களை கடந்தும் யாரும் ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜ ராகாத மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ். பி.க்களை கைது செய்து வரும் 1-ஆம் தேதி ஆணையம் முன் ஆஜர்படுத்த தேசிய பழங் குடியினர் ஆணையம் மாநில நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ரூ.5000-க்கு விற்கப்பட்ட சிறுமி

கடந்த சில ஆண்டுகளாக இடாக்புரி  தாலுகா பகுதியில் தலா ரூ.5000 பணம்,  ஒரு செம்மறி ஆட்டிற்காக 30 பழங்குடியின சிறுமிகள் விற்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காகத்தால் இந்த விவகாரம் வெளியுலகத்திற்கு தெரியா மல் மூடி மறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் பழங்குடியின சிறுமி மர்ம மான முறையில் உயிரிழந்த பின்புதான் தேசிய பழங்குடியின ஆணையம் சிறுமிகள் விற்பனையை கண்டறிந்துள்ளது. விற்கப் பட்ட சிறுமிகள் விபரம், வாங்கும் கும்பல், விற்கப்பட்ட சிறுமிகள் உயிரோடு இருக் கிறார்களா என்ற விபரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது அதிர்ச்சி தரத்தக்கது.