states

808 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: ரூ.365 கோடிசொத்துகள் முடக்கம்

சென்னை,நவ.7-  தமிழ்நாட்டில் 808 கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறை கேடுகளில் ரூ.365 கோடி மதிப் புள்ள சொத்துகள் முடக்கப்பட் டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு  நிறுவனங்களிலும் கணினி மயமாக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி யிலும், 23 மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கியிலும் மைய வங்கி யியல் தீர்வுமுறை நடைமுறை யில் உள்ளது. இந்த வங்கிகளில் மொபைல் பேங்கிங், ஆர்டிஜி எஸ், நிப்ட் போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கடந்த  செப்டம்பர் முதல் யூபிஐ வசதி அறிமுகப்படுத்தப் பட்டு, கூகுள் பே, பேடிஎம்  போன்ற வசதிகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த யூபிஐ வசதி  அனைத்து மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகளுக்கும் விரிவுப் படுத்தப்படும். நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் மைய  வங்கியியல் தீர்வுமுறை பணிகள்  நிறைவுறும் தருவாயில் உள்ளன. பணியாளர் கூட்டுறவு  கடன் சங்கங்களை கணினிமயப் படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டு, ஓரிரு மாதங்களில் நிறைவு  பெற உள்ளன.

மாநிலம் முழுவதிலும் உள்ள  4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும், 25 பெரும்பல்நோக்கு கூட்டு றவு சங்கங்களையும் கணினி மயப்படுத்துவதற்கு நபார்டு வங்கி மூலம் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்த  கணினிமயமாக்கல் பணிக ளால் கூட்டுறவு சங்கங்களில்  நடைபெறும் முறைகேடுகள் முழு மையாக கட்டுப்படுத்தப்படும். 808 க்கும் மேற்பட்ட சங்கங்க ளில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.365 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை  ஏலம்விடுவதற்கான நடவடிக் கைகளும் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. தொடர் புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாகக்குழு கலைக் கப்பட்டும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளன. நபார்டு வங்கி மூலம் 1  விழுக்காடு வட்டியில் பெறப்படும் கடன் உதவியை கொண்டு லாபத்தில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்கு கடந்த ஆண்டு வரை ரூ.54.00 கோடியும், 454 சங்கங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 1,648 கடன் சங்கங்களில் ரூ.456.97  கோடியில் 8,438 பணிகள் மேற் கொள்வதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.