சென்னை, ஜூன் 22- சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியதால் பய ணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வா கம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுண்ட்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் QR குறியீடு, பயண அட்டை போன்ற நடைமுறைகளில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள் ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தக வல் தெரிவித்துள்ளது.