states

தீர்த்தவாரியை அரசு கண்காணிக்க வலியுறுத்தல்

சென்னை, ஏப்.6- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(ஏப்.6) கேள்வி நேரம் முடிந்ததும், சென்னையை அடுத்து நங்கநல்லூரிலுள்ள பழ மையான தர்மலிங்கேஸ்வரர் கோயில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி யின்போது குளத்தில் மூழ்கி 5 பேர்  பலியானது குறித்து சிறப்பு கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப் பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றகுழுத் தலைவர் நாகைமாலி பேசுகையில், சென் னையை அடுத்த நங்கநல்லூரில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் சார்பில் நடந்த தீர்த்த வாரி நிகழ்ச்சியின் போது மூவ சரம்பட்டு குளத்தில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் சென்னை மட்டு மல்ல, மாநிலம் முழுவதும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. இந்த  விவகாரத்தில் அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிர்க் கட்சித் தலைவர் எடப் பாடி பழனிசாமி பேசும்போது,“ தீர்த்தவாரி நிகழ்வில் பலியான 5 பேர் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்பட்ட நிவாரணம் போது மானதாக இல்லை. அதை உயர்த்தி  வழங்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்றும் வின வினார். தீர்த்தவாரி போன்ற நிகழ்வு கள் மதநம்பிக்கை என்றாலும் அர சும் இந்துசமய அறநிலையத்துறை யும் கண்காணிக்க வேண்டும், காவல்துறை பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என்றும் பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று  செல்வப்பெருந்தகை (காங்), ஜி.கே.மணி (பாமக), எஸ்.பாலாஜி செல்வன் (விசிக), டி. ராமச்சந்திரன் (சிபிஐ), ஜெகன் மூர்த்தி, வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.