states

மாநிலத்தில் ஒரே நாளில் 370 பேர் டெங்குவால் பாதிப்பு

சென்னை,அக்.8- தமிழ்நாட்டில் தற்போது மழை பரவலாக பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. அதிலும் குறிப்பாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். வீடு களை சுற்றி தேங்கும் மழைநீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற் பத்தியாகின்றன. கொசு உற்பத் தியை தடுக்க பொது சுகாதாரத் துறை நீர்நிலைகளில் மருந்து தெளித்தல், வீடுகளுக்கு கொசு மருந்து அடித்தல் போன்ற பணி களை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இக்காலத்தில் கொசுக்க ளின் மூலம் டெங்கு காய்ச்சல் அதி கரித்து வருகிறது. ஒரே நாளில் 370 பேருக்கு டெங்குவால் பாதிக் கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை இயக்குநர் மருத்து வர் செல்வ விநாயகம் தெரிவித் திருக்கிறார். சென்னையிலும் டெங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  அரசு, தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தற்போது வரக்கூடிய காய்ச்சல் 4, 5 நாட்களுக்கு மேலாக உள்ளது. மருத்துவர்களின் மருந்துக்கு கட்டுப்படாமல் போனால் உடனே டெங்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.  பரிசோதனையின் முடிவில் டெங்கு இருப்பது உறுதியாகி விடு கிறது. அதனால் மருத்துவர்கள் தொடர் காய்ச்சல் பாதிப்பை அறிந்து  டெங்குவிற்கான சிகிச்சையை அளிக்க தொடங்கி விடுகின்றனர்.  இன்னும் 3 மாதங்கள் கொசு உற்பத்தி காலமாகும். அதனால் டிசம்பர் மாதம் வரை டெங்கு அதி கரித்து பின்னர் படிப்படியாக குறை யும். பொதுமக்கள் வீட்டை சுற்றி  மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெந்நீர் குடிக்க வேண்டும். உடல் தெரியாத அள விற்கு முழுமையாக ஆடை அணிய  வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.