states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தருமபுரி மின்வேலியில் சிக்கி 3 காட்டுயானைகள் பலி

தருமபுரி, மார்ச் 7- தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப் பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 யானை கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் வனத்தை ஒட்டிய விளை நிலங்களில் கடந்த சில மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து  பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சில  நேரங்களில் மனித விலங்கு மோதல் களும் நடைபெறுகிறது.  இந்நிலையில், பாலக்கோடு வட்டம்  காளிக்கவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய  நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருந் தது. அருகாமையில் உள்ள வனத்தி லிருந்து திங்கள்கிழமை இரவு வெளி யேறிய இரண்டு குட்டி யானைகள் உள்பட 5 யானைகள் இந்த நிலத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியிலிருந்து யானைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், 2 பெண் மற்றும் 1 ஆண் என  மொத்தம் 3 யானைகள் சம்பவ இடத்தி லேயே பலியாகின. நல்வாய்ப்பாக உடன் வந்த இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பின.  இருப்பினும் இவ்விரு குட்டி யானை களும் பெருந்தவிப்புடன் அதே பகுதியில் சுற்றி வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் செவ்வா யன்று அப்பகுதிக்குச் சென்று குட்டியானை களை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த பாறைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்(50) என்பவரை பாலக்கோடு காவல்துறையினர்  கைது செய்தனர். மின்வேலியில் சிக்கி பலியான யானைகளை உடற்கூறு ஆய்வு செய்த பின் அப்பகுதியிலேயே புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது தொடர் தாக்குதல் ஆய்வு செய்ய விரையும் சிபிஎம் எம்பி.,க்கள் குழு

கோயம்புத்தூர், மார்ச் 7- திரிபுரா மாநிலத்தில் எதிர்க்கட்சியினர் மீது திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மார்ச் 10, 11 இரண்டு நாட்கள் திரிபுரா மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக பி.ஆர்.நடராஜன் எம்பி., தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வட கிழக்கு மாநிலமான திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு எதிர்க்கட்சி நிர்வாகி கள் மீதும் அவர்களின் வீடுகள் மீதும் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். கட்சியின் அலுவலகங்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது.  வீடு மற்றும் உடமைகள் மீது தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 668 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தனக்கு மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்ற பாசிச மனப்பான்மையில் பாஜக இத்தகைய ஜனநாயக விரோத சம்பவங்களை அரங்கேற்றி  வருகின்றது.  அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்த்து ஆய்வு செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திரிபுரா மாநிலத்திற்கு வரும் மார்ச் 10, 11 ஆகிய இரு நாட்கள் செல்ல உள்ளோம். திரிபுரா  மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர், அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை,மார்ச் 7- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து  தெரிவித்துள்ளனர். சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்: நிர்பயா நினைவாக  நிறைவேற்றப்பட்ட பணியிட பாலியல்  வன்முறை தடுப்புச் சட்டம் அமலாக் கப்படுவதில்லை என்ற நிலையில் நடப்பாண்டு பெண்கள் தினத்தில், பாலின வேறுபாடுகளையும், அடக்கு முறைகளையும் ஆதரித்து வரும்  வகுப்புவாத சக்திகளின் கரங்களில்  சிக்கியுள்ள நாட்டின் அதிகாரத்தை மீட்கும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து, முன்னேறுவோம். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: 21 ஆம் நூற்றாண்டு கணினி  யுகத்தில் பெண்கள் எல்லா நிலை களிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வ தைக் கண்டு அகிலம் வியக்கின்றது. பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு, உலக மகளிர் நாள்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில்  மகிழ்ச்சி அடைகிறேன்.  பாமக நிறுவனர் ராமதாசு: வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள் வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க  வேண்டும். அத்தகைய கனவு சமுதா யத்தை உருவாக்க வேண்டியது ஒட்டு மொத்த சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற உலக மகளிர்  நாளான இந்த நன்நாளில் நாம் அனை வரும் உறுதியேற்போம். இவ்வாறு  தெரிவித்திருக்கிறார்கள். 

உடல்நலக்குறைவு: கி.வீரமணிக்கு ஓய்வு

சென்னை,மார்ச் 7- திராவிடர் கழக தலைவர் கி.வீ ரமணி, சமூக நீதி பாதுகாப்பு மற்றும்  திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்டம் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்று வரும் அவர், நாகை மாவட்டம், திருமருகல் மற்றும் காரைக்காலில் நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டத்தில் பேச இருந் தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து அவரது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு  சென்னை திரும்பினார். அடையாறி லுள்ள வீட்டில் கி.வீரமணி ஓய்வு எடுத்து  வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து ஆலோசனையை வழங்கினர்.

தலைமைச் செயலாளருடன்  ஆலோசனை

சென்னை,மார்ச் 7- வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு  கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரி களை சந்தித்து ஆலோசித்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, திருபெரும்புதூர், ஒரகடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில் செவ்வாயன்று(மார்ச் 7) சென்னை தலைமைச் செயலகம் சென்ற பீகார் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பொதுத்துறை செய லாளர் ஜெகநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்  சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லை

சென்னை, மார்ச் 7- தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட வுள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு  மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு  நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின்  உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருந் தார். இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டிருக்கிறது. மாண வர் சேர்க்கை குறித்த தெளிவான வழிகாட்டு தல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ரப்ரிதேவியைத் தொடர்ந்து லாலுவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

புதுதில்லி, மார்ச் 7 - பீகார் முன்னாள் முதல் வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத்திடம் சிபிஐ அதிகாரி கள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். பீகாரில் திங்களன்று லாலுவின் மனைவி ரப்ரி தேவியிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அதன் தொடர்ச்சியாக, லாலுவிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவ ரான லாலு பிரசாத், 2004  முதல் 2009 வரை, மன் மோகன் சிங் அமைச்சரவை யில் ஒன்றிய ரயில்வே  அமைச்சராக இருந்த போது, பீகாரைச் சேர்ந்தவர் களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, சிலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்ற தாகவும், அந்த நிலங்கள் லாலு குடும்பத்தினரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வும் சிபிஐ குற்றம்சாட்டி யுள்ளது. இந்த குற்றச்சாட் டின் பேரிலேயே தற்போது சிபிஐ அதிகாரிகள் விசார ணை நடத்தியதாக கூறப்படு கிறது. முன்னதாக சிபிஐ அதி காரிகள் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வரு மான தேஜஸ்வி,  “பாஜக-வுடன் இருந்தால், நீங்கள் ராஜா ஹரிச்சந்திரா தான். ஆனால், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும். மகா ராஷ்டிரத்தில் சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுக்குச் சென்றார். அவர் மீது அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய், பாஜகவுக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், நீங்கள் பாஜகவின் முகத்திரையை வெளிக் கொண்டு வந்தால் ரெய்டு தான் நடக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.