நாட்டில் உள்ள 30 மாநில முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், ஆந்திராவின் ஜெகன் மோகன் அதிக பட்சமாக ரூ. 510 கோடி சொத்துடன் முதலிடத் தில் இருப்பதாகவும் ஜன நாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 12 வயது சிறுவனின் வயிற்றில் சிறிய அளவிலான மரக்கிளை (இரண்டு கிளை பிரிவாக) துண்டு குடலுக்குள் சிக்கிக் கொண்டது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ் வந்தராவ் மருத்துவ மனையின் மருத்துவர்கள் மிகுந்த போராட்டத்து டன் சிறுவனின் குடலில் மரக்கிளையை அகற்றிய பொழுதிலும், சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளான். பழம் சாப்பிடும் பொழுது தவ றாக விழுங்கி குடலில் விதை சிக்குவது இயல்பா னது. ஆனால் மரக்கிளை எப்படி குடலுக்குள் சென்றது என மருத்து வர்கள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வரு கின்றனர்.
புதிய தொழிநுட்பத்து டன் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ரஷ்யா வெற்றிகர மாக சோதித்தது. இந்த ஏவுகணை கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஒரு சோத னை தளத்தில் போலி இலக்கைத் தாக்கியது.
‘பிரதமர் நரேந்திர மோடி யை விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படம் தொடர் பான உள்ளடக்கத்தை டுவிட்டர் நீக்கியபோது சரியாக என்ன நடந்தது என்பது எனக்குத் தெரி யாது. ஆனால் சமூக ஊட கங்களில் ஒவ்வொரு செய்தியும் தோன்று வதற்கு இந்தியாவில் உள்ள விதிகள் மிகவும் கடுமையானவைகளாக உள்ளன. மேலும் இந்திய நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் செல்ல முடியாத நிலை உள்ளது’ என டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதி காரி எலான் மஸ்க் கூறி யுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி ஆணையப் பரிந்து ரைகளின் மீது நடவடி க்கை எடுப்பது அரசின் அதிகாரத்துக்குட்பட்டது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்ற த்தில் விளக்கம் அளித்த நிலையில், விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேர வைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜக வில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி காங்கிரஸ் உடன் தொடர் பில் இல்லை; என்னிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் லட்சுமண் பேச வில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரி வித்துள்ளார். லட்சுமண் காங்கிரஸில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச் செய்திகள்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக அதிகமான பொருளாதார வளர்ச்சியை ஈட்டும் நாடாக வெனிசுலா இருக்கப் போகிறது என்று சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 5 விழுக்காடு மற்றும் 2024 ஆம் ஆண்டில் 4 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை வெனிசுலா எட்டும் என்று அண்மையில் வெளியான தனது பொருளாதார அறிக்கையில் ஐ.எம்.எப். தெரிவித்திருக்கிறது. அமெரிக்கத் தடைகளை மீறி இந்த வளர்ச்சி எட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தக விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. பல ஆண்டு களாக இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. சீனாவின் ஆலோசனையின்பேரில் இரு நாடுகளும் பல்வேறு வகையான உறவுகளைப் புதுப்பித்து வருகின்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரான், சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் ஆகிய இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முதல்கட்டமாகத் தொடங்கியிருக்கிறது.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற திரைப்படத் திருவிழாவிற்கு 60 நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வந்தது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எதிர்ப்பு தடைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், இந்தத் திருவிழாவுக்கு இவ்வளவு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை.