நாகர்கோவில்,பிப்.26- நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6 ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாடு குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கி னார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். முன்னாள் எம்.பி. பெல்லார் மின், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் செல்லசாமி (சிபிஎம்), வெற்றிவேல் (மதிமுக), சுபாஷ் சந்திர போஸ் (சிபிஐ), திமுக மாநகர செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய துணை கண்டத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்கு முறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822 ஆம் ஆண்டு முதல் திரு விதாங்கூர் சமஸ்தானத் ்தில் தொடங்கியது. அதன் பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்து ரைக்கும் வகையிலும் தோள் சீலை மாநாடு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கி றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பங்கேற்று பேசுகிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள வன், சிபிஎம் மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தர சன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர் கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்” என்றார்.