புதுதில்லி, நவ. 11 - அந்தமான் - நிகோபர் தீவு களின் தலைமைச் செயலாளராக இருந்த ஜிதேந்திர நாராயணும், தொழிலாளர் துறை ஆணை யாளராக இருந்த ஆர்.எல். ரிஷி என்பவரும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 வயது பெண் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 21 அன்று அந்தமான்-நிகோ பர் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள அபா்டீன் பகுதி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ மாகவே புகார் ஒன்றை அளித்தார். “நான் வேலை தேடிக் கொண்டி ருந்தபோது கடந்த ஏப்ரல் 14 அன்று ஜிதேந்திர நாராயணை, அவரின் வீட்டில் சந்தித்தேன். அப்போது வெகுவிரைவில் எனக்கு அரசுப்பணி ஒன்றை ஏற்பாடு செய்வதாக உறுதி யளித்தார். மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் நலத்துறை ஆணை யர் ரிஷியுடன் தொடர்பில் இருக்கு மாறும் கூறினார். அதன் பின்னர் இருவரும் என்னைக் கொடூர மான முறையில் பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளாக்கினர். கடந்த மே 1 அன்று ஜிதேந்திர நாராயண் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால், குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்” என்று அந்தப் புகாரில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருந்தார்.
இதன்பேரில் ஜிதேந்திர நாரா யண் அக்டோபர் 17-ஆம் தேதி அந்த மான் - நிகோபார் தீவுகளின் தலை மைச் செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அன்றே அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மறுநாள் தில்லியில் உள்ள ஜிதேந்திர நாராயண் வீட்டில் அந்தமான் - நிகோபர் மற்றும் தில்லி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஜிதேந்திர நாராயணிடமும் சிறப்பு புலனாய்வுக்குழு 3 முறை தீவிர விசாரணை மேற்கொண்டது. இதனால், தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ப தால், ஜிதேந்திர நாராயண் முன்ஜா மீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி னார். உச்ச நீதிமன்றமோ அவரை விசாரணை நீதிமன்றத்தை அணுகு மாறு கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து, ஜிதேந்திர நாராயண் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி சுபாஷ் குமார் கர் முன்பு விசாரணைக்கு வந்தது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற விசார ணையின்போது, ஜிதேந்திர நாரா யண் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி இருந்தாலும், அவர் எந்த வகையிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசுத் தரப்பில் வாதங்கள் வைக்கப் பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வழக்கறிஞர் பி.சி தாஸ், ஜிதேந்திர நாராயண் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி உள்ளிட்டோர் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து, ஜிதேந்திர நாராயண் மீதான குற்றச்சாட்டுகள் “கடுமையானவை மற்றும் கொடூரமானவை” என்று கூறிய நீதிபதி சுபாஷ் குமார் கர், “முறையான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணையின் நலனுக்காக காவலில் வைத்து விசாரணையின் தேவையை நிராகரிக்க முடியாது” என்றும், எனவே, ஜிதேந்திர நாராய ணின் முன்ஜாமீன் மனுவை தள்ளு படி செய்வதாகவும் உத்தரவிட்டார். இதையடுத்து, போர்ட் பிளேரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஜிதேந்திர நாராயணை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜிதேந்திர நாராயண், “என்னைச் சதியில் சிக்க வைத்துவிட்டனர்” என்று கூப்பாடு போட்டுள்ளார்.