states

மணிப்பூரில் தொடரும் வன்முறை : ரயில் சேவைகள் நிறுத்தம்

இம்பாலா, மே 5 - வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், கடந்த 5 நாட்களாக மிகப்பெரும் கலவரக் காடாக மாறி நிற்கிறது.  வாக்கு அரசியலுக்காக பாஜக தூண்டிவிட்ட வெறுப்பு அரசியலால் பிளவு பட்ட மெய்டெய் (Meitei) என்ற பட்டியல் வகுப்பு மக்களும், 34 பிரிவுகளைக் கொண்ட குகி-ஜோமி பட்டியல் பழங்குடியினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்தி நிற்கின்றனர்.  இவர்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிந்து சாம்பலாகிக் கிடக்கின்றன.  பலர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இறந்தவர்கள் பற்றிய விவரங்கள்  எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வில்லை. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்’ சமூக மக்கள் தற்போது பட்டியல்  வகுப்பினராக (Scheduled Castes) வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், தங்களைப் பழங்குடியினராக (Scheduled Tribes) அறிவிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. அதனை உணர்ந்து கொண்ட பாஜக, மணிப்பூரில் தாங்கள் ஆட்சி யதிகாரத்திற்கு வருவதற்காக, மெய்டெய் மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கு வதாக ஆசை காட்டியது.  மெய்டெய் மக்களும் அதனை நம்பி, கடந்த தேர்தலில் மீண்டும் பாஜக-வை ஆதரித்து அரியணையில் அமர்த்தினர். பைரன் சிங் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு மெய்டெய் மக்களின் கோரிக்கையை பாஜக மறந்து விட்டது.

இதனால் மெய்டெய் மக்கள், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தை நாடினர். அங்கு, இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமாறு மணிப்பூர் பாஜக அரசுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மெய்டெய் மக்களை பழங்குடி களாக அறிவிப்பதற்கு விட மாட்டோம் என்று மணிப்பூரிலுள்ள 34 துணைப்பிரிவுகளை உள்ளடக்கிய குகி-ஜோமி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ‘அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கத்தின் (ATSUM)’ தலை மையில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமையன்று ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’ நடத்தினர்.  ஆனால், பாஜக-வால் ஏமாற்றப்பட்ட மெய்டெய் மக்களும் போட்டி பேரணி நடத்தி னர். அப்போது, இரண்டு தரப்பினருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தது. ஒரு வருக்கொருவர் அடித்துக் கொண்டதுடன், வீடு, வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தற்போது மாநிலமே இரண்டுபட்டு வன்முறைக் காடாக காட்சியளிக்கிறது. 144 தடை உத்தரவு  போடப்பட்டு, கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டு வதற்கு கூடுதல் படைப்பிரிவுகளை அனுப்ப  ஒன்றிய அரசுக்கு மணிப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கூடுதல் படைப்பிரிவு கள் கவுகாத்தி மற்றும் தேஜ்பூர் விமான நிலையங்களுக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படஉள்ளன.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டு வதற்கு முன்னாள் சிஆர்பிஎப் தலைவரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான குல்தீப் சிங்  ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், அதிகாரப்பூர்வ தகவல்களைத் தவிர மற்றவை களை நம்ப வேண்டாம் என்று ராணுவ வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள நாகாலாந்து மக்கள்  பாதுகாப்பாக வெளியேறுவதற்காக நாகா லாந்து அரசு உதவி எண்களை அறிவித்துள் ளது. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேர் ராணுவம் மற்றும் துணை ராணு வப்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையச் சேவைகளும் 5 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலைமை சீராகும் வரை ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறி வுறுத்தியதைத் தொடர்ந்து ரயில் சேவையை நிறுத்துவதாக வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக வியாழனன்று மாலை, உள்துறை அமைச்சர் அமித்ஷா  மணிப்பூர் மற்றும் அண்டை மாநில முதல்வர்கள், மாநில மற்றும் ஒன்றிய அரசு உயர் அதிகாரிகளுடன் மாநிலத்தின் நிலையைக் குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.  இதுதொடர்பாக மணிப்பூர் தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ வன்ஜாகின் வால்டேவும் கலந்து கொண்டார். பின்னர் அவர், கூட்டம் முடிந்து, இரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் ஓட்டுநரும், பாது காப்பு அதிகாரியும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவரது காரை வழிமறித்த கலவரக் கும்பல், பாஜக எம்எல்ஏ-வை காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு, கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். ஓட்டுநரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரி தப்பியோடி விட்ட நிலையில், பாஜக எம்எல்ஏ- வும், அவரது ஒட்டுநரும் மட்டும் சிக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில், எம்எல்ஏவும், ஓட்டுநரும் கவலைக்கிடமான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.