states

லட்சத்தீவு ஆழ்கடலில் 2 புதியவகை மீன்கள்

கோழிக்கோடு, மே 22- லட்சத்தீவில் இரண்டு புதிய வகை மீன்கள் கிடைத்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், கடல் பல்லுயிர் ஆராய்ச்சி திட்ட ஆய்வாளர் இத்ரிஸ் பாபு தலைமையிலான குழுவினர் வட்ட வடிவிலான 2 கோட்லிங் வகை மீன்களை கண்டுபிடித்தனர். தைவானில் உள்ள கடல் உயிரியல் மற்றும் மீன்வளத்திற் கான தேசிய அருங்காட்சியகம், சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சியாளரான டாக்டர். சவுன் சிங் ஹோ, பனங்காடு மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக்கழக ஆய்வாளர் பி.சி.மரியம்பி, டாக்டர். எஸ் சுரேஷ் குமாரும் ஆய்வுக் குழுவில்  இடம்பெற்றிருந்தனர். பிசிகுலஸ் லட்சத்தீவு என்று இந்த மீன்கள் அழைக்கப்படுகின்றன. இந்த ஆய்வு குறித்த தகவலை முன்னணி அறிவியல் இதழான சூடாக்ஸ-யிலும், கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸின் மீன் அட்டவணையிலும் வெளியிடப்பட்டுள்ளது. லட்சத்தீவில் உள்ள கவரட்டி அருகே பவளப்பாறைகளுக்கு வெளியே இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.