states

6 மாவட்டங்களில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.181 கோடி

சென்னை, ஆக.12- தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வறட்சி நிவாரண பணிகளை மேற் கொள்ள ரூ.181 கோடியில் தமிழ்நாடு  வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக பெய்திருந்தாலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து பயிர்கள் கருகின. இதனால்,கடந்த 2022  அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் 2022  ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை யின் முழுப் பருவத்திலும் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி, 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல்  பயிர் இழப்பு ஏற்பட்டதால், இம்மாவட் டங்களில் “மிதமான விவசாய வறட்சியை” அறிவிக்க அரசு ஆய்வு செய்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயி னார் கோவில், பரமக்குடி, ஆ.எஸ்.  மங்கலம், ராமநாதபுரம், திருப்புல் லாணி, திருவாடானை. தென்காசி மாவட்டத்தில் ஆலங் குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்களைச் சேர்த்து சுமார் 1 லட்சத்து 42 ஆயிரத்து 832 ஹெக்டேர்  விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய  அளவு பெய்யாததால் பாதிப்புக்குள் ளான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்து 746 விவசாயி களுக்கு 6 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 714 ரூபாய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு 132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 ரூபாய், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்து 847 விவசாயிகளுக்கு 25 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரத்து 982 ரூபாய், தென்காசி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு 13 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 930 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 61 விவசாயிகளுக்கு 4 லட்சத்து 43 ஆயிரத்து 273 ரூபாய், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 220  விவசாயிகளுக்கு 2 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 964 ரூபாயும், என மொத்தம் ஆறு மாவட்டங்களில் 25 வட்டாரங்களில் உள்ள 1 லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சம் இடுபொருள் மானிய நிவாரண உதவி  வழங்க தமிழ்நாடு அரசால் அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.