உத்தரப்பிரதேசம் மாநிலம் உன் னாவ் அருகே ஆக்ரா - லக்னோ எஸ்க்பிரஸ் தேசிய நெடுஞ்சா லையில் பால் லாரி ஒன்று நின்றிருந்தது, புதனன்று அதிகாலை 5 மணியளவில் அந்த வழியாக வந்த தனியார் சொகுசு பேருந்து பால் லாரி மீது அதிவேகத்து டன் மோதியது. டபுள் டக்கர் (இரட்டை மாடி) வசதி கொண்ட பேருந்தில் இருந்த வர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்த நிலையில், லாரியுடன் மோதிய வேகத்து டன் பேருந்து பயணிகள் தூக்கி வீசப்பட்ட னர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்தி லேயே 18 பேர் உயிரிழந்தனர். படுகாயம டைந்த 10க்கும் மேற்பட்டோர் உன்னாவ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளி யாகியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பேருந்தில் பயணித்த வர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகி யுள்ளது.