states

கோயில்களின் 130 கிலோ தங்கத்தை உருக்கும் பணிகள் விரைவில் துவக்கம்

சென்னை, ஜூலை 2- ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பை தங்க உருக்கு ஆலையில் உருக்கப்பட உள்ள 130 கிலோ 512 கிராம் தங்கத்தின் மூலம் பெறப்ப டும் வைப்புத்தொகை, வட்டித் தொகை கோயில் திருப்பணிகளுக்கு செலவிடப்படும் என்று இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு 130 கிலோ தங்க நகைகளை, சுத்த தங்க நகைக்கட்டிகளாக மாற்றி நீதிபதி முன்னிலை யில் ஸ்டேட் வங்கி நிர்வாகிகள்  ஒப்படைத்தனர். பின்னர், செய்தி யாளர்களிடம் பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இருந்து பெறப்படும் காணிக்கை  நகைகளை உரிய முறையில் சேகரித்து, ஒன்றிய அரசுக்குச் சொந்த மான மும்பை தங்க உருக்கு ஆலை யில் தங்கக்கட்டிகளாக மாற்றயிருக்கி றோம். அதன்படி, 130 கிலோ  512 கிராம் தங்கம் உருக்கப்பட உள்ளது. அவ்வாறு கிடைக்கும் வைப்புத் தொகை மூலம் பெறப்படும் வட்டித் தொகையில் அந்தந்த கோயில்களின் திருப்பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான மேம்பாட்டிற்கு வழங்கப்படும். சிதம்பரம் நட ராஜர் கோயில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். பக்தர்கள் காணிக்கை நகைகளை உருக்கு வதை யார் எதிர்த்தாலும் இது போன்று நல்ல திட்டங்களை கைவிட மாட்டோம்’.

திருக்கோயில்களுக்கே வருமானம்

இது ஒரு நல்ல திட்டம். பல்வேறு  அவமானங்கள்; ஏச்சுக்கள்  பேச்சுக்கள் அவதூறுகள் எல்லா வற்றையும் கடந்து முதலமைச்சரின் தெளிவான வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்களுக்கு வருமா னத்தை ஏற்படுத்துகின்ற இந்த  திட்டம்; மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து பக்தர்கள் மகிழ்ச்சிக்கு வித்திடும். 15  நாட்களாக தங்கத்தை பிரித்து எடுத்து   நீதிபதிகள் கண்காணிப்பில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்து தங்க கட்டிகளாக மாற்ற உள்ளோம். வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் இந்தப் பணிகள் நடைபெறும் பெரியபாளையம் உள்ளிட்ட 3 கோயில்களில் தங்கத் தேரானது, நேர்த்தியாக செய்யப்படும் என்றும்;  18 மாதங்களுக்குள் தேர் பவனி  நடைபெறும் என்றும் பெரிய பாளையம் பவானி அம்மன் கோயி லில் ரூ.125 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்; வருகிற நவம்பர் மாதம் சிறு வாபுரி முருகன் கோயில் கும்பாபி ஷேகம் நடைபெறும் எனவும் தெரி வித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அறநிலைத்துறை ஆணையர்கள், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டிெஜ கோவிந்த ராஜன், துரை சந்திரசேகர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

;