திருவனந்தபுரம், ஏப்.24- பெட்ரோல், டீசல் போன்று மண்ணெண்ணெய் விலையை ஒன்றிய அரசு தினமும் உயர்த்தி வருகிறது. இரண்டு வாரங்களில் மானியம் இல்லாத மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2.09 உயர்த்தப்பட்டுள் ளது. ஏப்ரல் 3ஆம் தேதியன்று கடுமை யாக ரூ.18.77 உயர்ந்தது. இதனால், பாரம்பரிய மீனவர்கள் உட்பட சாதா ரண மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது மண்ணெண்ணெய் லிட்ட ருக்கு ரூ.55 ஆக இருந்தது. தற்போது 120 சதவீதம் அதிகரித்து ரூ.125.28 ஆக உள்ளது.
நாடு முழுவதும் பல லட்சக்கணக் கான பாரம்பரிய மீனவர்கள் பணிபுரி யும் இயந்திர படகுகளில் எரிபொரு ளாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப் படுகிறது. 2014-15 முதல், மாநிலங்களுக்கு மீன்பிடித்தலுக்கான அனைத்து மண்ணெண்ணையும் மத்திய கிடங்கில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த சிறிது காலத்தி லேயே மாநிலங்களுக்குமான ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் நிறுவனங்களுக்கு விடப்பட்டது. தேவையில் 20 சதவிகி தத்துக்கும் குறைவாகவே இப்போது மத்திய தொகுப்பில் உள்ளது. இதன் விலை லிட்டருக்கு ரூ.59இல் இருந்து ரூ.81 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.