states

வெளிநாட்டு மரங்களை அகற்ற 100 நாள் வேலை நிதி?

சென்னை, ஏப். 18 - மேற்குத் தொடர்ச்சி மலையில் வெளிநாட்டு மரங்களை அகற்ற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்  திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள  வெளிநாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு திங்களன்று (ஏப்.18) நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள  வெளிநாட்டு மரங்களை அகற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில்  வெளிநாட்டு மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம் எனவும், வேலை உறுதித்திட்டத்தின் நிதியை பயன்படுத்தும் போது அது அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும். இதுகுறித்து விளக்கம் அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விட்டு வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்.19) ஒத்தி வைத்தனர்.