states

காவலர் புத்துணர்வு பயிற்சி: ரூ.10 கோடியில் புதிய திட்டம்

சென்னை,மே 18- காவல்துறையினருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ.10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப் பட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு கூறினார். சென்னை எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியின் முதல்  மாடியில் புதிதாக சுய சேவை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, ஆணை யர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு, “காவலர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த புதிய  அங்காடி காவல்துறையினரின் குடும்பத்துக்கு பயனுள்ளதாக  இருக்கும்” என்றார்.

காவலர்களின் வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். காவலர்கள் பலர் மன அழுத்தத்துடனேயே பணிபுரிந்து வருகிறார்கள். ஆண்டுக்கு 250 பேர் முதல் 300 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இவர்களில் தற்போது ரம்மி விளை யாட்டு போன்றவற்றில் காவலர்கள் ஈடுபடுகிறார்கள். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம். காவல் பணி ஆபத்தான பணியாகும். பணி நேரத்தில்  தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பணியின்போது நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றியும் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவலர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.