states

தொடர் விடுமுறை எதிரொலி ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்

சென்னை, செப். 28- மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து காந்தி ஜெயந்தி என  தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் சென்னை யில் இருந்து பொதுமக்கள் வெளி யூர் செல்வது அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து வெளி யூர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. செப்.27 அன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அனைத்து ரயில்களும் நிரம் பியதால் அரசு பேருந்துகளை நோக்கி மக்கள் படையெடுத்தனர். அரசு விரைவு பேருந்துகள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்துக் கழகங்க ளின் பேருந்துகளில் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதி கரித்தது. நள்ளிரவு 1 மணி வரை  வெளியூர் சென்ற மக்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரி கள் பேருந்துகளை ஏற்பாடு செய்த னர். முன் பதிவு இல்லாமல் 1 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் மட்டும் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் சென்றுள்ளனர்.