சென்னை,ஜூலை 18- ‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர் பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கை களும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இருளர் இன மக்கள் அனு பவித்த கொடுமைகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த படத்தின் திரைக் கதைக்கும் நடிப்புக் கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தியதாக கூறி சூர்யா, ஜோதிகா, ஞானவேல் உள்ளிட் டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8இல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி காவல்துறையினர் , நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சைக் காட்சி நீக்கப்பட்டுள்ள தாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடை யீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள தாகவும், அந்த இடையீட்டு மனுவை யும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.