சென்னை, செப். 27 - 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள, 96-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘2018 (Everyone is a hero)’ என்ற மலையாளப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிரிஷ் கசரவல்லி தலைமையிலான இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலை யாளம் உள்ளிட்ட 22 மொழிகளிலிருந்து திரைப்படங்கள் முன் மொழியப்பட்டு இருந்த நிலையில், அவற்றில் இருந்து ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்க த்தில் வெளியான விடுதலை பாகம்-1, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி, இயக்குநர் பொன்குமார் இயக்கத்தில் வெளியான ஆகஸ்ட் 16,1947 ஆகிய திரைப்படங்களும் முன்மொழிவு பட்டியலில் இருந்தன. தமிழில் நான்கு திரைப்படங்கள், தெலுங்கில் நான்கு திரைப்படங்கள், இந்தியில் வெளியான 11 திரைப்படங்கள், மலையாளத்தில் ஒரு திரைப்படம், மராத்தியில் இரண்டு திரைப்படங்கள் முன்மொழிவு பட்டியலில் இடம் பெற்றன. இதில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோஸப் இயக்கத்தில் வெளியான ‘2018’ என்ற படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பினர் தெரிவித்த னர். கேரளாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. எல்லோருமே ஹீரோதான் என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக வும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையிலேயே தற்போது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.