ஜெய்ப்பூர், ஜூலை 1 - பாஜக-வில் வாரிசு அரசியல் இல்லை என்றால், ராஜ்நாத் சிங், எடி யூரப்பா, வசுந்தரா, மகாஜன், வேத் பிரகாஷின் வாரிசுகளெல்லாம் யார்? என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி யுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசில் வாரிசு அரசியல் நடப்ப தாக பேசியிருந்தார். இந்நிலையி லேயே, அவருக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். “காங்கிரசை ஒரு குடும்பத்தின் கட்சி என்கிறார்கள். அப்படிச் சொன் னால் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் யார்? ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் எம்எல்ஏ இல்லையா? வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பி இல்லையா? பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இல்லையா? வேத் பிரகாஷின் மகன் பியூஷ் கோயல் அரசியலில் இல்லையா? கிரண் மகேஸ்வரியின் மகளுக்கு பாஜக டிக்கெட் கொடுக்கவில்லையா? அல்லது பாஜக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்த லில் போட்டியிட டிக்கெட் வழங்கப் படாது என்று அறிவிக்க முடியுமா? முதலில் அதைச் செயல்படுத்த முடியுமானால், பின்னர் கேள்விகளை எழுப்புங்கள்” என்று கோவிந்த் சிங் தோதாஸ்ரா விளாசியுள்ளார்.