ராஜஸ்தானில் கடந்த 2023இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற பாஜகவிற்கு 2024 மக்களவைத் தேர்தலில் பல அதிர்ச்சித் தோல் விகளை அம்மாநில மக்கள் அளித்துள்ளனர்.
2019இல் தேர்தலைப் போன்று இந்த முறையும் 25 தொகுதிகளை யும் பெற்று விடுவோம் என்ற எண் ணத்தில் பாஜக தனது பிரச்சா ரத்தைத் தொடங்கினாலும் உட் கட்சி மோதல்களை சரி செய்வ தில் அக்கட்சியின் மத்திய தலை மை தீவிர கவனம் செலுத்தியது. இதுஒருபுறம் இருக்க ஒவ்வொரு தேர்தலிலும் தனியாகவே போட்டி யிட்டு வந்த காங்கிரஸ் இம்முறை வழக்கத்திற்கு மாறாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி மற்றும் பாரதிய ஆதிவாசிக் கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டை மேற் கொண்டது. காங்கிரஸ் 23 தொகு திகளிலும், மற்ற 3 கட்சிகள் தலா ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டன.
அதிகமான முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண் டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், ராணுவத்தில் வீரர்களை சேர்க்கும் புதிய திட்டமான அக்னி பாதை, ராஜஸ்தான் மாநில இளை ஞர்கள் மத்தியில் கடுமை யான அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக அரசியல் ரீதி யான பாதிப்பையும் அக்னிபாதை திட்டம் பிரச்சனை ஏற்படுத்தியது. இளைஞர்களின் கோபம் பல தொகுதிகளில் பாஜக எதிர்ப்பாக மாறியது. விலையுயர்வுப் பிரச்ச னையும் பெரிய அளவில் பேசப் பட்ட ஒன்றாகும்.
இவ்வாறு பல பிரச்சனை களுக்கு இடையே காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிகார், சுரு, கங்காநகர் மற்றும் ஜூன்ஜூனு ஆகிய தொகுதிகளில் நல்ல செல்வாக்கு உள்ள நிலையில், லோக்தந்திரிக் கட்சி மற்றும் பார திய ஆதிவாசிக் கட்சி ஆகிய வற்றிற்கு மாநிலத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. 4 கட்சி களின் ஒருங்கிணைப்பட்ட வாக்கு வங்கி காங்கிரஸ் தலைமையி லான “இந்தியா” கூட்டணிக்கு நல்ல பலனை அளித்துள்ளது.
குறிப்பாக விவசாயிகளின் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்ற நம்பிக்கை சிகார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ரா ராமை வெற்றி பெற வைத்திருக்கி றது. இதேபோல பல தொகுதி களில் விவசாயிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளை மக் கள் ஆதரித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி மற்றும் பாரதிய ஆதிவாசிக் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலை மையிலான “இந்தியா” கூட்டணி 11 தொகுதிகளை கைப்பற்றி யுள்ள நிலையில் கடந்த முறை 25 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக இம்முறை 14 தொகுதி களை மட்டுமே கைப்பற்றியது. ராஜஸ்தானில் தொடர்ந்து இந்த அரசியல் ஒற்றுமையைப் பாது காப்போம் என்று இந்த நான்கு கட்சிகளும் அறிவித்திருக்கின் றன.