states

img

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  மீண்டும் 9.12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும் 9.13 மணியளவில் 5.9ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை 
 

;