states

img

ராய்ப்பூரில் 16 வயது சிறுமி மீது தாக்குதல்

சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூரில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தரதரவென தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், 16 வயது சிறுமியை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தரதரவென தலைமுடியை பிடித்து இழுத்து செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை இழுத்து செல்லும் நபர் ஓம்கர் திவாரி (47) என்று தெரியவந்துள்ளது.
ஓம்கர் திவாரி நடத்தும் கடையில், சிறுமி வேலை செய்து வந்துள்ளார். அவர் சிறுமியை திருமணம் செய்ய சிறுமியின் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் சிறுமி வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த திவாரி, சிறுமியைக் கத்தியால் தாக்கி, அவரின் தலைமுடியைப் பிடித்து சாலையில் இழுத்துச் சென்றுள்ளார். 
இதை அடுத்து போலீசார் திவாரி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.