states

img

தசரா ஊர்வலத்தில் கார் மோதி ஒருவர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் தசரா ஊர்வலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சத்தீஷ்கார் மாநிலம் பதால்கோன் நகரில்  வெள்ளியன்று நடைபெற்ற தசரா ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர்  நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் அடையாளம் தெரியாத ஒருவர் பலியானார். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், இறந்தவரின் உடலை இந்திரா சதுக்கத்தில் வைத்து, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ரூ.4 லட்சம் இழப்பீடு பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். 
 இதற்கிடையே, மோதிய வாகனத்தில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில்  மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த அவர்கள், கஞ்சாவை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும் சம்பவம் தொடர்பாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

;