states

img

ராவணன் பொம்மை எரியவில்லை - நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்

சட்டீஸ்கரில் தசரா கொண்டாத்தின் போது ராவணனின் உருவ பொம்மை எரியவில்லை என்று நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சட்டீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் நடைபெற்ற தசரா விழாவின் போது ராவணன் பொம்மையின் பத்து தலைகள் சரியாக எரியவில்லை என்று இந்த நிகழ்வுக்கு பொறுப்பாளராக இருந்த நகராட்சி ஊழியர் ராஜேந்திர யாதவ் என்பவரை மாவட்ட நகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாவட்ட நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.