கொச்சி, பிப்.13- அநியாயக் காவலில் உள்ள சஞ்சீவ் பட்டுக்கு நீதி கிடைப்பதற்கான போராட் டத்தில் ஆதரவு அளித்த கேர ளாவுக்கு அவரது மனைவி ஸ்வேதா பட் நன்றி தெரி வித்தார். மறைந்த சமூக ஆர்வல ரும், கார்ட்டூனிஸ்டுமான கே.பி.சசியின் நினைவாக எர்ணாகுளம் சி.அச்சுதமேனன் ஹாலில் சுஹ்ருத்வலயம் ஏற் பாடு செய்திருந்த “எதிர்ப்பில் வாழ்வது” நிகழ்ச்சியில் ஸ்வேதா பேசினார். அப்போது அவர் கூறு கையில், “குஜராத்தின் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் சிறைக்கு சென்று 4 ஆண்டு கள் 5 மாதங்கள் ஆகிறது. சஞ்சீவ் பட் சிறைவாசம், அவரது நேர்மையான பணி மற்றும் அரச பயங்கரவாதத் திற்கு பதிலளிப்பதன் விளை வாகும். பட் மீதான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்றத்துக் கும் அங்கிருந்து உச்சநீதி மன்றத்துக்கும் மாற்றப்படு கின்றன. வழக்குகளை தீவி ரமாக விசாரிப்பது குறித்து கூட நீதிமன்றம் கவலைப்படு வதில்லை. இந்த வழக்கு பல மாதங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் கீழமை நீதிமன்றமே வழக்கை பரிசீலிக்க வேண் டும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நீதிமன்றம், வழக்கை கீழமை நீதிமன்றத்திற்கே மாற்றியது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து சஞ்சீ வுக்கு எதிராக வழக்கறிஞர் களை ஒன்றிய அரசு நிறுத்து கிறது. அரசு அவரை கண்டு பயப்படுகிறது. நீதிமன் றத்தை அணுகுவது சோர்வை ஏற்படுத்தினாலும், கணவ ருக்காக தொடர்ந்து போராடு வேன். நாட்டில் நிலவும் அநீதி களை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்தவர் கே.பி.சசி என்று ஜனயுகம் பத்தி ரிகை ஆசிரியர் ராஜாஜி மேத்யூ தாமஸ் கூறினார். அவர் ஒரு துறையில் மட்டும் தன்னை அடைத்துக் கொண்டவர் அல்ல என்றும், அரசியல், திரைப்படம் மற்றும் கார்ட் டூன், எழுத்துத் துறைகளிலும் தனக்கென முத்திரை பதித்த வர்” என்றார். கந்தமாலில் நடந்த வகுப்புவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய பங்கு தந்தை அஜய்குமார் சிங், முன்னாள் எம்பி டாக்டர் செபாஸ்டியன் பால், கே.பி.சேதுநாத் உள் ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சி யின் ஒரு பகுதியாக, கே.பி. சசியால் உருவாக் கப்பட்ட அநியாயக் காவலில் உள்ளோர் குறித்து குறும்பட மும், சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களைச் சொல்லும் ‘அப்துல் நாசர் மதானியின் குரல்’ என்ற புனைவு குறும்படமும் திரை யிடப்பட்டன. கந்தமாலில் கிறித்தவ சிறுபான்மையினருக்கு எதி ராக நடந்த வன்முறை, அத்து மீறல்களின் கதை கூறும் ‘வாய்ஸ் பிரம் தி யூனஸ்’ (Voices from the Younes) என்ற குறும்படமும் திரை யிடப்பட்டது. கே.பி.சசி உரு வாக்கிய கார்ட்டூன்கள் அடங் கிய கண்காட்சியும் நடந்தது. கல்கத்தாவைச் சேர்ந்த பாட கரான சசியின் நண்பர் சுஸ் மித் போஸின் இசை நிகழ்ச்சி யுடன் ‘லிவிங் இன் ரெசிஸ் டன்ஸ்’ என்னும் நிகழ்வு நிறைவு பெற்றது.