வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, மதுரை காமராசர்- மனோன்மணியம் சுந்தரனார், அன்னைத் தெரசா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் ஆசிரியர் மன்ற (MUTA) நிர்வாகிகள் ரூ. 8 லட்சத்திற்கான காசோலையை கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆர். பிந்துவிடம் ஒப்படைத்தனர். மூட்டா மற்றும் ஐபெக்டோ ஆகியவற்றின் பொறுப்பாளர்கள்- பேராசிரியர்கள் எம். நாகராஜன், ஆர். ராஜா, ஜெயசேகர், ஆர். ஜேம்ஸ், ஆர். ஹேய்ஸ் டாசன், பி. சிவஞானம், சி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஏகேபிசிடிஏ பொதுச் செயலாளர் கே. பிஜுகுமார் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.