states

img

வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்தவர் முலாயம்சிங்

திருவனந்தபுரம், அக்.10- உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்  முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். வகுப்புவாதத்துக்கு எதிராக எப்போதும் அவர் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்தார். தேசிய அளவில் இடதுசாரி மற்றும் மதச்சார் பற்ற இயக்கங்களின் கூட்டணியை உருவாக்குவதில் முன்னணிப் பங்காற்றினார் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகளாக உ.பி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது வலு வான மக்கள் தளத்திற்கு சான்றாகும்.  அவர் மூன்று முறை உ.பி.யின்  முதலமைச்சராகவும், யுபிஏ அமைச்சர வையில் மத்திய பாதுகாப்பு அமைச்ச ராகவும் பணியாற்றினார். அவர் எப்போ தும் மக்களுடனும், இடதுசாரிகளின் பரந்த மதச்சார்பற்ற இயக்கங்களு டனும் அன்பான உறவைப் பேணி வந்தார். தேசிய அளவில் இடதுசாரி - மதச்சார்பற்ற இயக்கங்களின் ஒற்றுமை  மீண்டும் வலுப்பெற்று வரும் வேளை யில் அவரது மறைவு மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்று முதல்வர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.