states

img

திருநங்கையரும் மாதர் சங்க உறுப்பினராகலாம்

திருவனந்தபுரம் (எம்.சி.ஜோசபின் நகர்), ஜன. 9- பாலின நீதிக்காக இந்தியாவின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம், திருநங்கைகளும் உறுப்பின ராகும் வகையில், தனது அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து வர லாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாதர் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இனிமேல், திரு நங்கைகள் உட்பட, 15 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்ணும், இயக்கத்தின் குறிக்கோள்களுக்கு இணங்கி உறுப்பினராகலாம் என மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கூறினார். திருநங்கைகள் கொள்கையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கேரளம். திருநங்கைகள் நல வாரி யத்தை முதன் முதலில் ஏற்படுத்தியது தமிழ்நாடு. இந்த மாநிலங்களில் மாதர் சங்கம் திருநங்கைகளுடன் கலந்துரை யாடியது. திருநங்கைகளை உறுப்பி னர்களாக இணைத்துக்கொள்வதன் மூலம், பிரச்சனைகள் மற்றும் தீர்வு களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்து கோரிக்கைகளை கூட்டாக எழுப்ப  முடியும் என்று உ.வாசுகி மேலும் கூறினார்.