கொச்சி, மே 11- வளர்ச்சிக்கு பக்கபல மாக நிற்பேன், அதில் அரசி யல் பார்க்க மாட்டேன் என முன்னாள் ஒன்றிய அமைச்ச ரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கே.வி.தாமஸ் கூறினார். செய்தியாளர்களிடம் வளர்ச்சிப் பணிகளுக்காக முதல்வரை பாராட்டியது உண்மைதான். இப்போதும் அந்த நிலைப்பாட்டில் உறுதி யாக உள்ளேன். கோவிட் கால செயல்பாடுகளிலும் வளர்ச்சி அடிப்படையிலும் அரசின் செயல்திறன் சிறப் பாக இருந்தது. அதை கூறுவ தில் என்ன தவறு? அப்படி கூறினால் காங்கிரஸுக்கு எதிரானவரா? என்று கே.வி.தாமஸ் கேள்வி எழுப்பி னார். நீண்ட காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து தலைவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன். ஆனாலும் ஒழுக்கமான செயல்பாட்டாளராக கட்சி யில் தொடர்கிறேன். தன்னை செல்லாக்காசு என்று குறிப் பிட்ட கே.முரளீதரனைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில ளித்த கே.வி.தாமஸ், அதை எர்ணாகுளம் மக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறி னார். திருக்காக்கரை காங்கி ரஸ் வேட்பாளரான உமா தாமஸ் தன்னை சந்திக்க வேண்டாம் என்று தலைவர்க ளே முடிவு செய்துள்ளதாக வும், அதனால்தான் உமா தாமஸ் பார்க்க வரவில்லை என்றும், ஆனால் அது குறித்து தனக்கு எந்தக் கவ லையும் இல்லை என்றும் கே.வி.தாமஸ் கூறினார்.