பாலக்காடு, ஜுன் 29- நிதி மூலதனத்தின் பிடியில் இருந்து விடுபட்டால்தான் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட நெருக்க டிக்குத் தீர்வு காண முடியும் என பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் கூறினார். இதற்கு இடதுசாரிகள் மக்களை ஒருங்கிணைத்து வலுவான போராட்டங்களை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். டி.சிவதாஸ மேனன் நினை வேந்தலின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்காடு மாவட்டக் குழு நடத்திய தொடர் சொற்பொழிவின் தொடக்கமாக, ‘கொள்ளை முதலாளித்துவம் மற்றும் சங் பரிவார் மேலாதிக்கத்தின் கீழ் நிகழ்கால இந்தியா’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசுகையில், ஏழை களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தா மல் பாசிஸ்டுகள் கொடூரமான தாக்கு தலை நடத்துகின்றனர். உணவு மற்றும் வேலைக்கான உரிமை, சுகாதார உரிமை, தரமான கல்வி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதி யம் ஆகியவை அடிப்படை உரிமை களாக இருக்க வேண்டும் என்றார்.
வெறும் 2 சதவீத வரி
அப்படியானால் பொருளாதார சமத்துவமின்மையை தவிர்க்கலாம். பிளவுபடுத்தும் ஆட்சியை ஒழிக்க முடியும். பெரும் பணக்காரர்களுக்கு 2 சதவிகித வரி விதித்தால் இந்த உரிமை களைப் பாதுகாக்க முடியும். இந்தியா வில் ஒரு பாசிஸ்ட்- கார்ப்பரேட் கூட்டு உருவாகியுள்ளது. அவர்களை இந்துத்துவா கார்ப்பரேட் கூட்டணி என்கிறோம். அவர்கள் நேரடியாக ஆட்சியில் ஈடுபட்டுள்ளனர். முழுமை யான அடக்குமுறை அவர்களின் கொள்கை. அறிவுஜீவிகள், விவசாயி கள் மற்றும் தங்கள் சொந்த கருத்தை பேசுபவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினாலும், கடுமை யான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும் பிரபாத் பட்நாயக் கூறினார்.