states

img

பிரிவினைவாதத்தைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் 'கேரளா ஸ்டோரி' உள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் 'கேரளா ஸ்டோரி' உள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், சங்க பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காகவே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.