கொச்சி, மே 9- கேரளாவில் உள்ள தானூரில் 22 பேர் உயிரிழந்த படகு விபத்தில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த சம்பவத்தை அதிர்ச்சிகரமானதாக குறிப்பிட்ட நீதிமன்றம், துறைமுக அதிகாரியிடம் அறிக்கை கோரியது. தற்போது, கடல்சார் வாரியமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன், நீதிபதி ஷோபா அன்னம்மா ஈப்பன் ஆகியோர் அடங்கிய விடு முறை கால அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, படகு உரிமையாளர் மீது வேண்டு மென்றே செய்யப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார். எஸ்.பி.பேட்டி தானூர் படகு விபத்தில் ஐபிசி 302இன் கீழ் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் விசார ணைக்கு ஒத்துழைத்து வரு கிறார் எனவும், 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு வார். பின்னர் அவரை காவலில் எடுத்து சாட்சியங்கள் பெறப்படும். குசாட்டில் இருந்து வந்த நிபுணர்கள் குழு படகில் ஆய்வு நடத்தவுள்ளது என நிருபர்களிடம் தெரிவித்தார். ஓட்டுநர் தினேஷ் உள்ளிட்ட ஊழி யர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது எனவும் அவர் கூறி னார்.