திருவனந்தபுரம், அக். 30 - கேரள மாநிலம் களமச்சேரியில் ஞாயி றன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கிறிஸ்தவ மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்பு கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே, களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை கேரளம் ஒரு மனதுடன் ஒன்றுபட்டு எதிர்கொள்ளும்; ஒருபோதும் வெறுப்புணர்வை பரப்ப அனுமதிக்காது என்று முதல்வர் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
அமைதி, சகோதரத்துவத்தை உயிரைக் கொடுத்தும் காப்போம்
உலகின் கவனத்தில், கேரளத்தை மையமாக மாற்றியதில், அமைதி, சகோ தரத்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய சிறப்பு சமூக சூழ்நிலைகள் முக்கிய காரணிகளாகும். இந்தச் சூழலை தங்கள் உயிரை விலையாகக் கொடுத்துப் பேணுவதில் கேரள மக்கள் உறுதி பூண்டுள்ளனர். ஆனால், கேரளத்தின் பெருமைக்குரிய இந்தப் பொதுச் சமூகச் சூழலைப் பொறுத்துக் கொள்ளா தவர்களும், அதை ஒழிக்கத் துடிப்பவர் களும் இருப்பதை நாம் அறிவோம். எந்த விலை கொடுத்தாவது, கேரளத்தில் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் முயற்சி களை முறியடித்து, ஒரே மனதுடன் முன்னேறுவதை உறுதி செய்வோம்.
மக்களைத் துண்டாடுவோரின் முயற்சிகளை முறியடிப்போம்!
பரஸ்பர நம்பிக்கை, ஒருவருக்கொரு வர் சார்ந்திருத்தல் மற்றும் கூட்டு வாழ்க்கை என்ற சகாப்தத்தை, அவநம்பிக்கை மற்றும் சகிப்பின்மையின் நச்சு விதைகளை விதைத்து அழிக்கும் முயற்சிகள் அனைத்தும் வலிமையுடன் எதிர்க்கப்படும் என்பதை இக்கூட்டம் ஒருமனதாக உறுதிப்படுத்துகிறது. ஊகங்கள், கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகளைப் பரப்பி சமூகத்தில் போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஒருவரையொருவர் அந்நியப் படுத்தும் முயற்சிகளை நம் சமு தாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் முளை யிலேயே நசுக்க முன்வர வேண்டும். அனைத்து மத நம்பிக்கை உள்ளவர் களும் தங்கள் நம்பிக்கைகளை கடை பிடிக்க அனைத்து சுதந்திரமும் உள்ள சமூகம் இது. மதச்சார்பின்மை, தனிமனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு போன்ற அரசமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையிலான இந்த வகையான சுதந்திரத்தின் பாது காப்பு இங்கு எல்லா வகையிலும் உறுதி அளிக்கப்படும். எந்த மதத்தின் மீதும் வெறுப்புணர்வை பரப்பும் சூழ்நிலையை அனுமதிக்கக் கூடாது.
எந்த சமூகத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பதை அனுமதிக்க முடியாது
எந்த ஒரு நபரையும், எந்த சமூகத்தை யும் எந்த நம்பிக்கை கொண்ட சமூகத்தையும் சந்தேகத்துடன் பார்க்க அனுமதிக்காதீர்கள். இவ்வாறான எண்ணங்களைப் புகுத்த முயலும் தீய சக்திகளே நாட்டுக்கும் மக்களுக்கும் பொது எதிரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கருதுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு அரசியல் இயக்கமும், ஒவ்வொரு அமைப்பும் இந்த சிந்தனை யை சமுதாயம் முழுவதும் பரப்பு வதற்கான உறுதியான முயற்சிகளில் முன்வர வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மதச்சார்பின்மை பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க முடியாது
தனிப்பட்ட சம்பவத்தின் அடிப்படை யில் கேரளத்தை, அதன் பெருமை மிக்க மதச்சார்பற்ற கலாச்சார பாரம் பரியம் மற்றும் சமூக தனித்து வத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் தனிமைப்படுத்த அனை த்து மக்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள், யூகங்கள் பரப்புதல் மற்றும் வதந்தி பரப்புதல் ஆகியவற்றில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. வதந்திகளைப் பரப்புவதற்குப் பின்னால் உள்ள தேச விரோத மற்றும் மக்கள் விரோத தீமையை அடையாளம் காண ஒவ்வொரு மனமும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் கேரளம் ஒருமனதாக இருப்பதையும், அனைத்து நிலைகளிலும் அமைதி, மத நல்லிணக்கம், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மதச்சார்பற்ற நல்லிணக்கம் வலுப்பெறும் என்பதையும் இந்தக் கூட்டம் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.