states

img

கேரளாவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில். நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27- ஆக உயர்ந்துள்ளது.  

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.  இதற்கிடையே கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களின் உயிர்களையும் காவு வாங்கி வருகின்றன.

அந்தவகையில் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற இடங்களில்  வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் 1912 -என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கேரள பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

;