திருவனந்தபுரம், அக். 19 - கேரள மாநிலம், தலச்சேரி அரசுக் கல்லூரியின் பெயரை ‘கோடியேரி பால கிருஷ்ணன் நினைவு அரசு கல்லூரி’ என மாற்றம் செய்து கேரள உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. உயர்கல்வித் துறையின் பொது ஊழி யராகவும், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் கல்லூரியின் முன்னேற் றத்திற்காக கடந்த காலங்களில் கோடி யேரி பாலகிருஷ்ணன் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில், தலச்சேரி கல் லூரிக்கு, கோடியேரி பாலகிருஷ்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர். பிந்து குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தலச்சேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் - கேரள சபாநாய கருமான ஏ.என். ஷம்சீர் அளித்த கடி தத்தில், அரசுக் கல்லூரிக்கு கோடியேரி பாலகிருஷ்ணன் பெயரை சூட்டுமாறு கேட்டுக்கொண்டிருந்தததாகவும் அமைச் சர் பிந்து தெரிவித்துள்ளார்.