states

img

கேரளத்தில் ஆயிரம் நாட்களாக தொழிலாளர் போராட்டம்

கஞ்ஞிக்கோடு, அக்.17- பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத் துறை நிறுவனமான கஞ்ஞிக்கோடு பெமலை (பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்) விற்கும் முடிவை எதிர்த்து தொழிலாளர்களின்  காலவரையற்ற வேலைநிறுத்தம் 1000 நாட்களை எட்டியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்ஞிக்கோடு என்னும் இடத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பெமல் நிறுவனம் உள்ளது. மினி ரத்னா பிரிவில் முதலிடம் பெற்ற இந்நிறுவ னத்தை தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. அதன் படி 2021 ஜனவரி 4 அன்று டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து, தொழிலாளர் கள் 2021 ஜனவரி 6,  முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். ஆயிரம் நாட்களை நிறைவு செய்யும் போராட்டத்தை வியாழனன்று (அக்.19) மாலை 3 மணிக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் இ.என்.சுரேஷ்பாபு தொடங்கி வைக்கி றார். இதையொட்டி ஆயிரம் பலூன்கள் வானில் பறக்க விடப்படும். கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களுக்கான பாதுகாப்பு வாகனங்களை தயாரித்து தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்த பெமலை விற்பனை செய்யும் ஒன்றிய அரசு பெமல் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்க தனியார்மயமாக்கப் படுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.  ஆனால் அந்தத் துறையில் அனுபவம் குறைந்த தனி யார் நிறுவனங்களும் டெண்டரில் பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.