திருவனந்தபுரம், ஜன.14- மாநிலத்தை பொருளா தார ரீதியாக நசுக்கி அதன் வளர்ச்சியைத் தடுக்கும் ஒன்றிய அரசின் அணுகு முறைக்கு எதிராகவும், ஒன்றிய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் அச்சுறுத்த லுக்கு எதிராகவும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அளவிலான நடைபயணம் மேற்கொள்ளும் என எம்.வி. கோவிந்தன் செய்தியாளர்க ளிடம் தெரிவித்தார். மாநிலச் செயலர் தலை மையிலான நடைபயணம் பிப்ரவரி 20-ஆம் தேதி காசர் கோட்டில் தொடங்கி அனைத்து பகுதிகளிலும் பயணித்து மார்ச் 18-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது. பி.கே.பிஜு தலைமையிலான பய ணத்தில் எம்.சுவராஜ், சி. எஸ்.சுஜாதா, கே.டி.ஜலீல், ஜெய்க் சி.தாமஸ் ஆகி யோர் இடம்பெறுவர்.
வேலையில்லாத் திண் டாட்டம், பட்டினி ஆகியவை அதிகரித்து வரும் நாட்டின் பொதுவான சூழ்நிலை யையும், மாற்றுக் கொள்கை களை முன்னிறுத்தி கேரள அரசு மக்களுக்கு அளித்து வரும் நிவாரண நடவடிக்கை களையும் இந்த நடை பயணம் விளக்குகிறது. நாடு முழுவதும் விலைவாசி உயர் வால் மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எந்த தீர்வுக்கும் வழிவகுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அறிக்கை, வகுப்புவாத பிளவு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை தெளிவு படுத்துகிறது. ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக நடந்து வரும் இந்துக்களின் போர் தொடர வேண்டும் என்று கூறுவது ஜனநாயக மற்றும் மத சகிப்புத்தன்மை கொண்ட மக்களுக்கு ஒரு சவாலாகவும் அச்சுறுத்த லாகவும் உள்ளது. ஒற்றை சிவில் சட்டம் அமல்படுத்தப் படும் என்று பாஜக தலைவர் கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் இந்து ராஷ்டிர அறிவிப்பு நிகழ்ச்சி நிரலின் பகுதியாகும். ஆளுநரின் நிலைப் பாட்டின் அடிப்படையில் கட்சியின் அணுகுமுறை அமைந்துள்ளது. அரசிய லமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்பட்டால் அதை எதிர்க்க வேண்டிய அவசி யம் இல்லை. ஒன்றிய அரசு செய்ய வேண்டியது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நேரடியாகவும் ஒருதலைப்பட்சமாகவும் கொண்டு வராமல், தேவை யான விவாதங்களை நடத்த வேண்டும். காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர்களால் ஒன்றும் செய்ய முடியாததால் தான் நாடாளு மன்றம் செல்லவில்லை என எம்.வி.கோவிந்தன் கூறினார்.