states

img

டாலர் கடத்தல் வழக்கில் சிவசங்கரனுக்கு ஜாமீன்....

கொச்சி:
டாலர் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐடி செயலாளர் எம்.சிவசங்கருக்கு ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் பொருளாதாரக் குற்ற நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் மூலம் சிவசங்கர் சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.98 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.ஜாமீன் விண்ணப்பத்தை சுங்கத்துறையினர் எதிர்க்கவில்லை. சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட தங்க கடத்தல் வழக்குமற்றும் அமலாக்கத்தால் எடுக்கப்பட்ட பணமோசடி வழக்கு ஆகியவற்றில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்க இயக்குநரகம் (இடி) மேற் கொண்ட பணமோசடி வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

;