states

சொந்த வருவாய் இரண்டே ஆண்டுகளில் ரூ.85,542 கோடியாக அதிகரிப்பு

கேரளத்தின் மொத்த வருவாயின் முக்கிய ஆதாரங்கள் மதுவும் லாட்டரியும்தான் என்று ஒரு திட்டமிட்ட அவ தூறுப் பிரச்சாரம் வளர்ந்து வருகிறது. கேரள ஆளுநர் மற்றும் டாக்டர் கே. பி. கண்ணன் போன்ற சில பொருளாதார நிபுணர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

உண்மை என்ன?
கேரளத்தில் மதுபானங்களுக்கு இரண்டு வகையான வரிகள் உள்ளன: விற்ப னை வரி மற்றும் கலால். 2022-23இல் மது பான விற்பனை வரி வருவாய் ரூ.14,843 கோடியாகவும், கலால் வருவாய் ரூ.2876 கோடியாகவும் இருந்தது. மொத்தம் ரூ.17,719 கோடி. லாட்டரி மூலம் கிடைத்த மொத்த லாபம் ரூ.1018 கோடி. அதையும் சேர்த்தால் மொத்த வருவாய் ரூ.18,737 கோடி. 2022-23 இல் கேரளத்தின் சொந்த வரி வருவாய் ரூ.70,199 கோடி. வரி அல்லாத வருவாய் ரூ.15,355 கோடி. மொத்தம் 85,544 கோடி. இதன் சதவிகிதத்தை வைத்துப்  பார்த்தால், மதுபானம் மற்றும் லாட்டரி மூலம்  22 சதவிகிதம் வருவாய் மட்டுமே வருகிறது. ஆனால் இப்படிக் கணக்கிடுவது,

தவ றான அணுகுமுறையாகும். கேரளத்தின் மொத்த வருவாயைக் கணக்கிட்டு, அதில் இது எத்தனை சதவீதம் என்று பார்க்க வேண்டும். அப்படியானால், கேரளத்தின் மொத்த வருவாய் எவ்வளவு? இந்த ரூ.85,544 கோடியுடன் கேரளத்தின் வரிப் பங்கு (ரூ.17,784 கோடி), ஒன்றிய அரசின் மானியம் (ரூ.25,941 கோடி) மற்றும் ஒன்றிய அரசின் தகுதியான கடன் (ரூ.36,763 கோடி) ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். அப்போது கேரளத்துக்கு சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இந்த ரூ.1.66 லட்சம் கோடியில் ரூ.18,737 கோடி (மது, லாட்டரி வருவாய்) வெறும் 12 சதவிகிதம் மட்டுமே. இதுவே சரியான அணுகுமுறையாகும். இதன்படி கேரளத்தின் முக்கிய வருவாய் மதுவும் இல்லை; லாட்டரியும் இல்லை என்பது புலப்படும். உதார ணத்திற்கு, கேரள மக்கள் செலுத்தும் வருமான வரியை எடுத்துக் கொள்ளுங்கள். 2022-23 ஆம் ஆண்டில் கேரளாவில் இருந்து சுமார் 20.6 லட்சம் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செலுத்திய வருமான வரி ரூ.19,562 கோடி (இது 2021-22க்கான தொகை. 2022-23க்கான தொகை மேலும் அதிகரிக்கும். ரூ.23,000 கோடியாக உயரலாம்). இதில் ஒரு பகுதி மீண்டும் கேரளத்துக்கு ஒன்றி யத்திலிருந்து வரிப் பங்காக வரும்போது அது கேரளத்தின் வருவாய் இல்லை என்று  சொல்ல முடியுமா? கார்ப்பரேட் வரிகள், மானியங்கள், ஒன்றிய அரசால் அனுமதிக்க ப்படும் கடன்கள் கேரளத்தின் வருவாயே. சுருக்கமாகச் சொன்னால்,

கேரளத்தின் மொத்த வருவாயில் 12 சதவிகிதம் மட்டுமே மதுபானம் மற்றும் லாட்டரி வருவாயில் இருந்து வருகிறது. கேரளத்தின் மொத்த வருவாயில் 50 சத விகிதம் மட்டுமே சொந்த வருவாய். மீத முள்ள 50 சதவிகிதம் வரிப் பங்கு, மானியங் கள் மற்றும் ஒன்றியத்தின் பொதுக் கடன்கள். சமீபத்திய ஆண்டுகளில் இந்த தனித்துவ மான வருமானத்தை அதிகரிப்பதில் கேரளா சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி யுள்ளது. கேரளாவின் சொந்த வருவாய் (வரி  + வரி அல்லாதது) 2020-21இல் ரூ.54,987 கோடியாக இருந்தது. 2022-23ல் ரூ.85,542 கோடி. அதாவது இரண்டே ஆண்டுகளில் ரூ.30,555 கோடி அதிகரித்துள்ளது. நிதியமைச்சர்கள் டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக் தொடங்கி வைத்து, கே.என்.பால கோபால் தொடர்ந்த வரி வசூலில் சீர்திருத் தம், கேரளம் இந்த உயர்வை அடைய முடிந் தது. “அதிகப்படியாக” வசூலான இந்த ரூ. 30,555 கோடியில் ரூ.5,000 கோடி அளவே மது மற்றும் லாட்டரி மூலம் கிடைத்த “அதிகப்படியான” வருவாய். அது சுமார் 16 சதவிகிதம் பங்களிப்பு மட்டுமே.