states

img

ரயில்வே அமைச்சருக்கு பினராயி விஜயன் கடிதம்!

ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் வைஸ்னவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் மோடியால் திறந்து துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கேரளத்தில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழித்தடங்களில், பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா, மலப்புரம் மாவட்டத்திலுள்ள திருர் ஆகிய பகுதிகளில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.