திருவனந்தபுரம்,டிச.6- பாறசால அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், நீதி மருந்த கத்தை 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என்றும் சிபிஐ(எம்) கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பாறசால ஏரியா மாநாடு வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தனுவச்சபுரத்தில் எழுச்சி யுடன் நடைபெற்ற இம்மாநாட்டில் புதிய செய லாளராக எஸ்.அஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார். கடகுளம் சசி, வி.எஸ்.பினு, வி. தனுப்பிள்ளை, வி .சுரேஷ், ஆர்.பிஜு, சதீஷ், எஸ். சுரேஷ், எஸ்.கே.பெண்டர்வின், என். ராதாகிருஷ்ணன், மஞ்சுஸ்மிதா, ஆர். சோபனா, ஜே.ஜோஜி, ஆர்.நாத், என்.எஸ். நவ்னீத் குமார், கே.அம்பிகா, ஆர்.சுசீலன், எஃப்.லாரன்ஸ், எஸ்.பி. ஆதர்ஷ் ஆகியோர் பகுதிக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கோடியேரி பாலகிருஷ்ணன் நகரில் எஸ்டிஏ மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் பலர் கலந்து கொண்டனர்.
திரு வனந்தபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ரதீந்திரன், எஸ்.அஜய குமார் ஆகியோர் பிரதிநிதி கள் விவாதம்- கேள்வி களுக்கு பதிலளித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் களான அமைச்சர் வி.சிவன்குட்டி, எம்.விஜய குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் சி.ஜெயன் பாபு, கே.சி.விக்ரமன், புத்தன்கடை விஜயன், கே.எஸ். சுனில்குமார், எஸ். புஷ்பலதா, மாவட்ட குழு உறுப்பி னர்கள் சி.கே ஹரீந்திரன், கே.அன்சலன், டி.கே.சசி ஆகியோர் பங்கேற்றனர்.
டிசம்பர் 4 அன்று மாலை தனுவச்சபுரம் பூங்கா சந்திப்பில் இருந்து செஞ்சேனை அணிவகுப்பும், பேரணியும் தொடங்கின. தொடர்ந்து சீத்தாராம் யெச்சூரி நகரில் (பஞ்சாயத்து சந்திப்பு) நடைபெற்ற பொதுக்கூட்டத்தை மத்தியக்குழு உறுப்பினர் கே.என்.பாலகோபால் தொடங்கி வைத்து உரையாற்றினார்.